புதுவருடத்தை முன்னிட்டு உணவகங்கள் சுற்றிவளைப்பு…!!

Read Time:1 Minute, 48 Second

4b8e1cff-9e78-4a10-a5cc-9c68b532d293தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உணவு தயாரித்த உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் பொலிஸாரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் சுற்றிவளைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி, உட்பட பல வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இடங்களை வைத்திருந்த மற்றும் உணவுப்பொருட்களை தயாரித்த 5 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதபாலன் தெரிவித்தார்.

இத்திடீர் சுற்றிவளைப்பின்போது 10க்கும் அதிகமான உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, சில உணவகங்களை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டதுடன் ஒருவார காலத்தினுள் உணவகத்தினை தூய்மைப்படுத்திய பின்னர் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உத்திரவின் பின்னர் மீண்டும் திறக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் மாயம்..!!
Next post பேஸ்புக் காதல் தற்கொலையில் முடிவு…!!