சுவிஸில் இருந்து தப்பி ஜேர்மனியில் புகலிடம் கேட்ட 10 வயது சிறுவன்…!!
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து சட்டவிரோதமாக தப்பிய 10 வயது சிறுவன் ஒருவன் தற்போது ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Einsiedeln என்ற நகரில் எரித்திரியா நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி அந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளான்.
அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் சுவிஸ் பொலிசாரிடம் புகார் அளித்திருந்தனர். பொலிசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அங்குள்ள ஒரு அகதிகள் முகாமில் இந்த சிறுவன் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளனர்.
முகாமில் விசாரணை செய்தபோது, அவர் சுவிஸில் இருந்து தப்பி வந்தவர் தான் என உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து சுவிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் பேசியபோது, ‘சுவிஸில் இருந்து தப்பிய சிறுவன் தற்போது ஜேர்மனியில் புகலிடம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவரை தற்போது திரும்ப அழைத்து வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது சிறுவனின் தாயார் சுவிட்சர்லாந்து நாட்டில் இருப்பதால், சிறுவனை விரைவில் அழைத்து வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating