வவுனியாவில் இடி மின்னல் தாக்கம்: வீடுகள் சேதம்- இருவர் காயம்..!!

Read Time:1 Minute, 42 Second

timthumbவவுனியாவில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளன.

வவுனியா, பட்டானிச்சூர், 03ம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.

நேற்று மாலை இடி மின்னல் காற்றுடன் கூடியதாக மழை பெய்து கொண்டிருந்த போதே அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ் வீடு சேதமடைந்துள்ளதுடன், அருகில் இருந்த வளாகத்தில் குப்பை எரித்துக் கொண்டிருந்த ஆ.சு.நவாஸ் (வயது 52) என்பவர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததுடன், அவருக்கு அருகில் இருந்த நிசாம்தீன் (வயது 60) என்பவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினால் அருகருகே இருந்த இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, வவுனியாவில் இந்த மாத ஆரம்பத்தில் இடி மின்னல் தாக்கத்தினால் இருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மதில்கள் இடித்து உடைப்பு..!
Next post காதலைக் குலைக்கும் ஈகோ… அதனால் பெருகும் விவாகரத்து..!!