14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்! (வீடியோ)

Read Time:2 Minute, 55 Second

Russiachildescape14-வது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

தெற்கு ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில் இல்யா என்ற 15 வயது சிறுவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறான். மது பழக்கமே இல்லாத இந்த சிறுவன், கடந்த ஞாயிறன்று மது அருந்துவிட்டு போதையில் தள்ளாடியவாறு வீட்டிற்கு வந்துள்ளான்.

மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்த அவனுடைய பெற்றோர், சிறுவனை அமர வைத்து புத்திமதி கூறியுள்ளனர். பெற்றோரின் வார்த்தைகளால் வேதனை அடைந்த சிறுவன், கவலையோடு அன்று இரவு படுக்கைக்கு சென்றுள்ளான்.

மறுநாள் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு சீக்கிரமாகவே வீட்டிற்கு திரும்பிய சிறுவன், பெற்றோரையும் சந்திக்காமல் நேராக 14வது தளத்தில் இருந்த கூரை மீது ஏறி, தனது கைகளை வெட்ட முயற்சி செய்துள்ளான். பின்னர், ரத்தக் காயங்களுடன் அங்கிருந்து தரையை நோக்கி குதித்துள்ளான். ஆனால், அதிர்ஷ்டவசமாக குறுக்கே இருந்த ஒரு கயிற்றில் மோதி, வேகம் குறைந்து தரையில் நின்றுருந்த கார் மீது விழுந்துள்ளான் சிறுவன்.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த சிறுவனை தூக்கி ‘என்ன நடந்தது?’ எனக் கேட்டுள்ளனர். ’தற்கொலை செய்துக்கொள்ள நான் தான் மேலே இருந்து குதித்தேன்’ என கூறிவிட்டு அந்த சிறுவன் மயக்கமாகியுள்ளான்.

இந்த குறித்து தகவல் அறிந்த பெற்றோர், சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு தொடை எழும்பு மட்டும் முறிந்துள்ளது. மற்றப்படி, எந்த ஆபத்தான காயமும் ஏற்படவில்லை.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ’14-வது மாடியில் இருந்து குதித்து உயிர் பிழைத்துள்ளது உண்மையில் ஒரு அதிசயமான நிகழ்வு. எனினும், சிறுவனுக்கு இப்போது ஆபத்தான நிலை இல்லாததால் அவன் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவான்’ என தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாளை நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் தொடங்கி வைக்கிறார்கள்..!!
Next post விக்ரம் பிறந்தநாளில் சிறப்பு பரிசு கொடுக்கும் இருமுகன் படக்குழு..!!