யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு – பின்லாந்து நாடு அதிரடி நடவடிக்கை.
Read Time:1 Minute, 8 Second
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை ஃபின்லாந்து எடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன் கண்காணிப்புக் குழுவைவிட்டு வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையிலேயே, பின்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கிணங்க, கண்காணிப்பு குழுவில் அங்கம் வகிக்கும் பின்லாந்து உறுப்பினர்கள் 12 பேரும் கண்கணிப்பு பணியில் இருந்து விலகி தமது தாயகம் திரும்ப உள்ளதாக கண்காணிப்பு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.