இலங்கை விபச்சார தொழிலின் ராணி “ஜினா மேடத்திற்கு” பிணை மறுப்பு – ரொஸ்மெரி ப்லேமினா..!!
இலங்கையில் பெரியளவில் விபச்சாரத் தொழிலைக் கொண்டு நடாத்திய “ஜினா மெடம்” என அழைக்கப்பட்ட ரொஸ்மெரி ப்லேமினா பெரேரா என்பவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராஸ் இதனை இவ்வாறு தள்ளுபடி செய்துள்ளார். குறித்த மனு எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை எந்தவொரு ஒப்பந்தத்தின் பேரிலும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்ஸி அர்சகுலரத்ன மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், குறித்த சந்தேகநபர் பல வருடங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காது தலைமறைவாகி இருந்த ஒருவர் எனவும் இவரை பிணையில் செல்ல அனுமதிக்க கூடாதெனவும் அரசாங்க சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.
இதன்படி, இரு தரப்புக்களின் வாதங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதி குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்
Average Rating