யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதியில் சடலம் மீட்பு..!!
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதியும் தாவடி சந்தியும் இணைக்கும் பகுதியில் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை அப்பகுதியில் உள்ள கடைத்தொகுதிக்கு முன்னால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இ.துரைசிங்கம்(வயது-56) என்பவராவார்.
சாரதியாக கடமையாற்றும் இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நஞ்சு உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் மூலம் அறியமூடிகின்றது.
அத்துடன் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.இதில் தனது மரணத்திற்கு எவரும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் எவரையும் விசாரணை செய்ய வேண்டாம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சடலம் நீதவானின் வருகையை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
Average Rating