குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்..!!
குஜராத்தின் மெஹ்சானா நகரில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதலில் ஈடுப்பட்டனர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்
அகமதாபாத்:
படேல் சமூகத்தின் இடஓதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் ஹர்தீக் படேலை விடுக்க கோரி மெஹ்சானா நகரில் போராட்டம் நடத்த படேல் சமூகத்தினர் அனுமதி கேட்டார்கள். ஆனால் போலீசார் அனுமதிக் கொடுக்கவில்லை. இதை அடுத்து போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் மூண்டது.
இதில் போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டன. போலீஸ் மீது கற்களை வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் போலீசார் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் வன்முறையில் ஈடுப்பட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெஹ்சானா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வன்முறை பரவாமல் இருக்க அகமதாபாத், சூரத் உள்பட பல நகரங்களில் மொபையில் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
Average Rating