ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு – 3 பேர் காயம்..!!
மேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு – 3 பேர் காயம்
பெர்லின்:
மேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் நேற்று மாலை ஒரு திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர், அங்கிருந்து முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில் பல ஜன்னல்கள் உடைந்தன.
இச்சம்பவத்தில் 47 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்றுபேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிகுண்டு தாக்குதல் உள்நோக்கத்துடன் நடந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating