ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!!
Read Time:1 Minute, 6 Second
ஆலங்கட்டி மழையில் சிக்கிய பூடான் விமானம் அதிர்ஷ்டவசமாக 90 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கவ்காத்தி:
பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக் ஏர் நிறுவன விமானம், 90 பயணிகளுடன் தாய்லாந்துக்கு செல்லும் வழியில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்தது. அங்கு தரை இறங்க முயன்றபோது, சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிக்கொண்டது.
இதனால், விமானத்தின் மூக்குப்பகுதி சேதம் அடைந்திருப்பது படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. நல்லவேளையாக, விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Average Rating