நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: மேக்ஸ்வெல்லுக்கு எச்சரிக்கை..!!
Read Time:1 Minute, 7 Second
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: மேக்ஸ்வெல்லுக்கு எச்சரிக்கை
கடந்த 15–ந் தேதி டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் ‘டக்‘ அவுட் ஆனார். அவரது விக்கெட்டை அமித் மிஸ்ரா வீழ்த்தினார். அப்போது மேக்ஸ்வெல் நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும்படி நடந்து கொண்டார். இது விதிமீறிய செயலாகும். இதையடுத்து அவருக்கு மேட்ச் ரெப்ரி ரோஷன் மகனமா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்று அடுத்த முறை நடந்து கொண்டால் அபராதம் விதிக்கப்படும்.
Average Rating