நியாயம் கேட்ட மனைவியை கொன்று 5 துண்டாக வெட்டிய சமையல் கலைஞர்..!!

Read Time:2 Minute, 2 Second

murder (2)தெற்கு டெல்லியில் உள்ள அயா நகரில் சமையல் கலைஞர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று அவரது உடலை 5 துண்டுகளாக வெட்டியுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள அயா நகரை சேர்ந்தவர் குல்புத்தீன். அவரது மனைவி புல்லு பேகம்(36). அவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

குல்புத்தீன் அஸ்ஸாமை சேர்ந்த ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு இரண்டாவது மனைவியுடன் அஸ்ஸாமில் செட்டிலாக முடிவு செய்துள்ளார். இதற்கு பேகம் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு மகள் தூங்கிய பிறகு குல்புத்தீன் தனது மனைவியை முதல் மாடிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரின் உடலை 5 துண்டுகளாக வெட்டினார்.

இதையடுத்து அவர் தனது மனைவியின் உடலை அப்புறப்படுத்திவிட்டார். இந்நிலையில் தாயை காணாமல் மகளுக்கு தந்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த சிறுமி தனது தாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குல்புத்தீனை அழைத்து விசாரித்தபோது முதலில் எதுவும் தெரியாதது போன்று பேசியுள்ளார். அதன் பிறகு அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்..!!
Next post ஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை..!!