இரு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு..!!
இலங்கையில் தாதிப் பயிற்சி பெறும் இரண்டு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சி செய்த முச்சக்கர வண்டிசாரதியொருவரைத் தேடி பொலிஸார் தேடிவருகின்றனர்.
கண்டி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதிகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டி சாரதியை தேடி வருகின்றனர்.
குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கண்டி வாவிக் கரையில் வைத்து தமது தங்குமிடம் செல்வதற்கு கடந்த 14 ஆம் திகதி ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு பயிற்சி தாதிகளான தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியதாகவும், பாதைகள் பற்றிய சரியான விபரம் தமக்குத் தெரியாத நிலையில் முச்சக்கர வண்டிச் சாரதி ஹந்தானை நான்காம் கட்டைப் பிரதேசத்திற்கு தம்மை அழைத்துச் சென்று ஊசி மூலம் மயக்கமருந்து ஏற்ற முற்பட்டபோது தாம் தப்பி வந்ததாக தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
தம்மிடமிருந்த ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் மேற்படி சாரதி பாலியல் நோக்கத்தை அடையும் விதத்தில் முறைகேடாக நடக்க முயற்சித்ததுடன் மறைத்து வைத்திருந்த மயக்க ஊசி மூலம் தம்மை மயக்கி பல்லுறவில் ஈடுபட முயற்சித்ததாதகவும் அவர்களது முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே கண்டிப் பொலிசார் இது தொடா்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த முச்சக்கர வண்டி சாரதியைத் தேடி வருகின்றனர்.
Average Rating