சட்டவிரோத மதுபானம் – சம்பூரில் 5வது முறையாக கைதான பெண்..!!
Read Time:51 Second
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் கிழக்கு பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 65 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து 15,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, இதே குற்றச்சாட்டில் முன்னர் நான்கு தடவைகள் அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating