மோட்டர் சைக்கிளில் வந்த நபர் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து…!!

Read Time:2 Minute, 5 Second

dsfdfttமது போதையில் மோட்டர் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா-மன்னார் வீதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

வேப்பங்குளம் பகுதியில் மன்னார் வீதி வழியாக வவுனியா நோக்கி வந்த துவிச்சக்கர வண்டியை அதே வீதி வழியாக வந்த மோட்டர் சைக்கிள் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனும் தந்தையும் காயமடைந்துள்ளதாகவும், மோட்டர் சைக்கிளில் வந்த நபர் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இவ் விபத்துச் சம்பவத்திற்கு காரணமான மோட்டர் சைக்கிள் சாரதி மது போதையில் வந்தததாகவும், தனது தலைக்கவசத்தை பிடித்த போதே வேகக் கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத மதுபானம் – சம்பூரில் 5வது முறையாக கைதான பெண்..!!
Next post மர்மாக காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி..!!