மர்மாக காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி..!!
Read Time:1 Minute, 14 Second
எல்பிட்டிய ஓமத்த திகல கனேகொட பிரதேசத்தில் வசித்து வந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் ஒரு மாதமாக காணாமல் போயுள்ளதாக தெரியவந்தள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதியில் இருந்து தமது மகள் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பெற்றோர் எல்பிட்டிய மற்றும் ஊரகஹா காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் காவற்துறை குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவிலும் முறைப்பாடு செய்த போதும் இதுவரை தமது மகள் தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பெற்றோர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமக்கு பாடசாலை மாணவி காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை எல்பிட்டிய காவல் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Average Rating