45நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறவாகியிருந்த தந்தை கைது…!!
பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 14ம் திகதி பிறந்த 45நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறவாகியிருந்த தந்தையை 18.04.2016 திங்கள்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 14ம் மது போதையில் வந்து தன்னை தகாத வார்த்தைகளால் பேசி தன்னையும் எனது சிசுவையும் கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்ததாக சந்தேக நபரின் மனைவி கடந்த 15ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
தாக்கபட்ட சிசுவும் தாயும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனவே கைது செய்யபட்ட சந்தேக நபர் 19.04.2016 அன்று செவ்வாய்க்கிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating