3 கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கண்டைனர் மீட்பு…!!
Read Time:1 Minute, 9 Second
குளியாப்பிடிய – ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய பன்சல சந்தியில் மூன்று கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கண்டைனர் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப் பகுதியால் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு நீதவானின் அறிவுரைப்படி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குளியாபிடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating