கணவன், மனைவி மீது தாக்குதல் : இருவர் கைது…!!
Read Time:1 Minute, 1 Second
செம்பியன்பற்று, மாமுனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(17), வீடொன்றுக்குள் நுழைந்து கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (18) கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்.ஜெயக்குமார் (வயது 30), ஜெயக்குமார் கசீனா (வயது27) ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கியதன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Average Rating