சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை..!!

Read Time:2 Minute, 12 Second

timthumbகடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாக 3 பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், குறித்த மூவருக்கும் திருணம் செய்துகொடுத்து விட்டு தானும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

எனினும் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த நபருடைய முதலாவது மனைவி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்திருந்தார்.

வழங்கு விசாரணைகளின் போது, தன்னுடைய முதல் மனைவிக்கு மாதாந்தம் 5,000 ரூபாயாயை வழங்குவதற்கு குறித்த நபர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே சில நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென்று உயிரிழந்துள்ளார்.

எனினும் உயிரிழந்த நபரின் சடலத்துக்கு உரிமை கோரி இரண்டு மனைவிமாருக்கிடையிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய கணவருடைய சடலத்தை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு முதலாவது மனைவி, இரண்டாவது மனைவிக்கு கூறியுள்ளதாகவும்

தன் கணவருடைய இறுதிக் கிரியைகளின் போது, தான் அதில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் முதலாவது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி நபர் பலி..!!
Next post அவுக்கண புத்தர் சிலையில் இருந்து கீழே விழுந்து நபரொருவர் பலி..!!