அவுக்கண புத்தர் சிலையில் இருந்து கீழே விழுந்து நபரொருவர் பலி..!!
Read Time:1 Minute, 3 Second
மதுகமை பட்டமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவுக்கண புத்தர் சிலையில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்ற சென்ற நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 10.00 மணி தொடக்கம் தம்பான பழங்குடியினரின் உதவியுடன் இந்த கூட்டை அகற்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது கயிற்றின் உதவியுடன் சிலையின் உயரப் பகுதிக்கு ஏறி நபரொருரே இவ்வாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
52 வயதான குறித்த நபரின் சடலம் களுத்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் உயரமான சிலை இதுவென கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating