கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கோடரியுடன் சரணடைந்தார் -வவுனியாவில் சம்பவம்…!!
Read Time:1 Minute, 0 Second
நேற்று இரவு வவுனியா – புதுகம பிரதேசத்தில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தினமும் வீட்டிற்கு மதுபோதையில் வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும், நேற்றைய தினமும் இவ்வாறு மது போதையில் சண்டையிடும்போதே இந்த அனர்த்தம் நடந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating