சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!!

Read Time:1 Minute, 51 Second

201604210126293976_Signal-pole-fell-down-in-the-road_SECVPFசிக்னல் கம்பம் முறிந்து சாலையில் விழுந்ததையடுத்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஊத்துக்கோட்டையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1½ லட்சம் செலவில் சத்தியவேடு சாலை, திருவள்ளூர் சாலை. பெரியபாளையம், புத்தூர் சாலைகளில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இவை கடந்த சில நாட்களாக செயல் இழந்து துருபிடித்து காணப்பட்டது. டிராபிக் சிக்னல் வேலை செய்யாததால் அந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமானது.

சில மாதங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மற்றும் புத்தூர் சாலையில் அமைக்கப்பட்ட சிக்னல் கம்பங்கள் திடீர் என்று முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அப்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற வில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் சத்தியவேடு சாலையில் அமைக்கப்பட்ட டிராபிக் சிக்னல் கம்பம் பயங்கர சத்தத்துடன் திடீர் என்று முறிந்து சாலையில் விழுந்தது. டிராபிக் சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளதால் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டுவிட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர்..!!
Next post துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை..!!