துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை..!!

Read Time:3 Minute, 44 Second

201604201956553536_Daughter-and-sonkilling-poison-and-committed-suicide_SECVPFதுடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை கவுண்டம் பாளையத்தை அடுத்த இடையர்பாளையம் அன்புநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி விஜயாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் விஜயாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே ராஜேந்திரன் அவரை பிரிந்தார்.

பின்னர் மஞ்சுளா என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்தார். இரண்டாவது மனைவிக்கு பிரபா(15) என்ற மகளும், சுகேஷ்(13) என்ற மகனும் உள்ளனர். பிரபா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பும், சுகேஷ் 7–ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மஞ்சுளா தனது கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மனைவி கிடைக்காததால் ராஜேந்திரன் மனம் உடைந்து காணப்பட்டார். அவரால் மகன், மகளை சரியாக கவனிக்க முடிய வில்லை. இதனால் மகன், மகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டார். இரண்டு மனைவிகளையும் பிரிந்த ராஜேந்திரன் தனது நிலையை நினைத்து மிகவும் வருந்தினார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ராஜேந்திரன் வீட்டில் இருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது. உடனே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச்சென்றனர். வீட்டுக்குள் ராஜேந்திரன், பிரபா, சுகேஷ் ஆகியோர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சை வரவழைத்து மூன்று பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பிரபா இறந்தார். அதிகாலை 2.15 மணிக்கு சுகேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்த சில மணி நேரத்தில் ராஜேந்திரனும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திரன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது பூச்சி மருந்து பாட்டில்கள் கிடந்தன. எனவே ராஜேந்திரன் தான் தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்தி ருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

2–வது மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தில் ராஜேந்திரன் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!!
Next post பிறந்து 8 மாதமே ஆன மகளை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை…!!