பிறந்து 8 மாதமே ஆன மகளை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை…!!

Read Time:2 Minute, 4 Second

201604210704508238_Father-chops-off-the-hands-of-a-17-year-old-accused-of_SECVPFபஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்லி அப்லு கிராமத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தை ஒன்றை, அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு கொடூரமாக கற்பழித்தார். இது தொடர்பாக பதிண்டா மாவட்ட கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக அந்த வாலிபரும், குழந்தையின் தந்தையும் நேற்றுமுன்தினம் கோர்ட்டுக்கு வந்தனர். விசாரணை முடிந்து இருவரும் வீடு திரும்பும்போது, ‘இந்த விவகாரத்தை சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம்’ எனக்கூறி குழந்தையின் தந்தை அந்த வாலிபரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், திடீரென அந்த வாலிபரை பிடித்து அருகில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தார். பின்னர் வாலிபரின் இரு கைகளையும் மணிக்கட்டின் கீழ் துண்டித்து விட்டார். பிறந்து 8 மாதமேயான தனது குழந்தையை கற்பழித்ததற்கு பழிக்குப்பழியாக இந்த செயலில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை..!!
Next post யானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!