லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம்: உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்…!!

Read Time:2 Minute, 55 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70லண்டனில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

60 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியர்கள் தாங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் ஆடைகளில் சிந்திவிடுவதால் அதனை தவிர்ப்பதற்காக அரைநிர்வாணம் மற்றும் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் உணவகங்களை அமைத்தனர்.

ரோமானியர்களிடம் நல்ல வரவேற்பைபெற்ற இந்த உணவகம் தற்போது லண்டனில் வரவிருக்கின்றது, ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அரைநிர்வாண முறையில் அமர்ந்து மது அருந்தும் மதுபானக்கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபானக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்தும் மது அருந்தும் இருக்கையானது நன்றாக வடிவமைக்கப்பட்டு சற்று நாகரீகமா இருக்கும்.

இந்நிலையில், அரைநிர்வாண மதுபானக்கடைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதனை அடிப்படையாக கொண்டு லண்டனில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த உணவகம் முற்றிலும் மூங்கிலைகொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும், மேலும் வாடிக்கையாளர்களை சுற்றி மெழுகுவர்த்தி வெளிச்சங்களே இருக்கும், மின்சார விளக்கு, கைப்பேசிகள் போன்ற நவீன உலகத்தில் இருந்து விடுபட்டு மாறுபட்ட உலகத்திற்கு உங்களை அழைத்துசெல்வது போன்று இருக்கும்.

மேலும், இந்த உணவகத்தில் இரண்டுஅறைகள் இருக்கும், உட்புறமாக இருக்கும் அறையில் நிர்வாணமாக இருக்கும் வாடிக்கையாளர்களும்,வெளிப்புற அரையில் அரைநிர்வாண வாடிக்கையாளர்களும் அமர்ந்து உணவருந்தலாம்.

இந்த உணவகத்திற்கு செல்ல வேண்டுமானால்,http://thebunyadi.com/ என்ற இணையதளத்தில் நமது பெயரை பதிவு செய்த பின்னர், அவர்களிடம்இருந்த அந்த நபருக்கு ரகசிய கோடு அனுப்பப்படும்,அதன் பின்னரே இந்த உணவகத்திற்கு செல்ல முடியும்.

இந்நிலையில், வரவிருக்கின்ற இந்த உணவகத்திற்கு செல்வதற்காக 5,000 பேர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!
Next post இந்திய போர்க்கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 மாலுமிகள் காயம்: விசாரணைக்கு உத்தரவு..!!