வவுனியாவில் பெற்றதாயைக் கூட்டில் அடைத்துக் கொடூரம் ; பொலிஸில் முறைப்பாடு…!!

Read Time:1 Minute, 24 Second

Untitledவவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்றதாயைக் கூட்டில் அடைத்து வைத்துள்ளமை தொடர்பில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது தாயை 5 வருடங்களாக கூட்டில் அடைத்து வைத்ததாக பொதுமகன் ஒருவரால் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாயை மீட்டதுடன் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது தாயைக் கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை 5 வருடங்களாக நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் வவுனியா பொலிஸாரிடம் தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்…!!
Next post குடும்பச் சண்டை! 3 குழந்தைகளின் 30 வயதுத் தாய் தீக்குளித்து மரணம்!! கணவனும் கவலைக்கிடம்..!!