காதலி மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்..!!

Read Time:2 Minute, 11 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70கனடா நாட்டில் காதலி மற்றும் உடன் பிறந்த சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Hamilton என்ற நகரில் 37 வயதான ஜேம்ஸ் மில்ரோய் என்ற நபர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று 19 வயதான தன்னுடைய காதலியை ஜேம்ஸ் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, குடும்ப உறுப்பினர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் ஆவேசம் அடைந்த ஜேம்ஸ் துப்பாக்கியை எடுத்து தனது காதலி, இளைய சகோதரன் மற்றும் 70 வயதான மூதாட்டியை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காதலி, சகோதரன் மற்றும் ஜேம்ஸ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.படுகாயம் அடைந்துள்ள மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சடலங்களை கைப்பற்றிய பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன் தினம் பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், துப்பாக்கி சூடு எதனால் நடத்தப்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை.மூவர் கொல்லப்பட்டுள்ள இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்புக்கொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை: சாதனை படைத்த மருத்துவர்கள்…!!
Next post மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை…!!