ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்பு..!!
Read Time:1 Minute, 12 Second
கேகாலை – எட்டியாந்தோட்டை – நாவட்ட பிரதேசத்தில் உள்ள களனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற குறித்த இளைஞர்கள் களனி ஆற்றில் இறங்கிய நிலையில், நேற்று புதன்கிழமை அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுஜித் பிரசன்ன என்ற 22 வயதையுடைய தனது சகோதரரைக் காப்பாற்றச் சென்ற அசித்த சமீர என்ற 20 வயதையுடைய சகோதரனும் உயிரிழந்தார்.
படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் நேற்றையதினம் முதல் அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating