வேதாரண்யம் அருகே விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு: நாகை கோர்ட்டு உத்தரவு…!!
விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு நாகை கோர்ட்டு உத்தரவு
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவருக்கு திருமணமாகி வசந்தி (28) என்ற மனைவியும் சக்திசகானா (4) என்ற பெண் குழந்தையும் மகிமித்ரன் என்ற மகனும் உள்ளனர்.
இவரது தாய் குமுதவள்ளி (60). தந்தை ரெத்தினம் (65). முருகானந்தம் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். 24.11.14 அன்று கரியாப்பட்டிணத்திலிருந்து வேதாரண்யம் நோக்கி தன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இவர் வேதாரண்யம் நகராட்சி பகுதி திருவாசகுளம் அருகே வந்தபோது வேதாரண்யத்திலிருந்து கரியாப்பட்டிணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது.இதில் முருகானந்தம் படுகாயம் அடைந்தார். இவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் முருகானந்தம் இறந்து வட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த முருகானந்தம் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி வேதாரண்யம் வக்கீல் கே.வி.ராசேந்திரன் மூலம் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவகுமார் முருகானந்தம் குடும்பத்துக்கு நாகை நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
Average Rating