காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: மாணவர் உள்பட 2 பேர் பலி…!!

Read Time:1 Minute, 31 Second

201604221441224309_truck-collide-motor-cycle-student-including-two-death_SECVPFமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் நாகராஜ் (வயது15). 10–ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
இவர் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் நாகராஜன் (19), ராமர், காளிமுத்து ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நரிக்குடி நோக்கி சென்றார். கடமங்கலம் விலக்கு அருகே அவர்கள் சென்றபோது முடுக்கன்குளத்தில் இருந்து காரியாபட்டி வந்த செம்மண் கிராவல் லாரி மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாணவர் நாகராஜ் மற்றும் நாகராஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காரியாபட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் காயத்துடன் கிடந்த ராமர் மற்றும் காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொக்காவிவில் விபத்து சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயம்…!!
Next post திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேர் கைது..!!