மெக்டொனால்ட் சிலையை திருடியது யார்? கண்டுபிடிக்கும் நபருக்கு 2 லட்சம் பரிசு…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் திருடப்பட்ட மெக்டொனால்ட் உணவகத்தை சேர்ந்த சிலையை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் பேர்ன் நகரில் மெக்டொனால்ட் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் அடையாளமாக திகழும் மெக்டொனால்ட் உருவச் சிலையை கடந்த டிசம்பர் மாதம் சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த உணவக நிர்வாகிகள் ‘சிலையை கண்டுபிடித்து கொடுக்கும் நபருக்கு 1,500 பிராங்க் (2 லட்சத்து 24 ஆயிரம் இலங்கை ரூபாய்) சன்மானமாக கொடுக்கப்படும் என விளம்பரம் வெளியிடப்பட்டது.
ஆனால், கடந்த 3 மாதங்களாக தேடியும் அந்த சிலையை பொலிசார் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், திருடப்பட்ட மெக்டொனால்ட் உருவச்சிலை பேர்ன் நகரில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் பேசியபோது, கடந்த மாதம் தங்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பேர்ன் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை செய்தபோது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை மீட்டு தற்போது உரியவரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், உணவகம் அறிவித்துள்ள 1,500 பிராங்க் சன்மானம் தற்போது யாருக்கு அளிக்கப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Average Rating