உ.பி. முதல் மந்திரி வீட்டு அருகே கொலை செய்யப்பட்ட மாணவி 21 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்: டி.என்.ஏ. பரிசோதனையில் தகவல்..!!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வீட்டு அருகே உள்ள புதரில் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி பிளஸ்–2 மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பிப்ரவரி மாதம் 10–ந்தேதி காணாமல் போய் இருந்தார். இதுபற்றி அவரது பெற்றோர் புகார் செய்திருந்தனர். 6 நாட்களுக்கு பிறகு அவரது பிணம் கண்டுடெக்கப்பட்டது.
அதில் அந்த மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 ரிக்ஷாகாரர்கள், அருகில் உள்ள கோல்ப் மைதான 2 ஊழியர்கள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அந்த மாணவி அங்குள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததாகவும், அந்த பிணத்தை இறக்கி மாணவி பிணத்துடன் செக்ஸ் உறவு கொண்டதாகவும் கூறினார்கள். 2 நாள் தொடர்ந்து செக்ஸ் உறவு கொண்டோம். பின்னர் பிணம் அழுக தொடங்கியதால் பிணத்தை புதரில் வீசிவிட்டோம் என்றனர்.
ஆனால் மாணவியை மர்ம மனிதர்கள் கற்பழித்து கொன்றுவிட்டு பிணத்தை தூக்கில் தொங்கவிட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார்? என்று தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அவரை யார், யார்? கற்பழித்துள்ளனர் என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரது உடலில் இருந்த ஆண்களின் உயிர்அணுக்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர்.
அதில் 21 ஆண்கள் அவரை கற்பழித்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்படுவதற்கு முன்பும், பிணமானதற்கு பின்பும் இவர்கள் கற்பழித்துள்ளனர். 21 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ள தகவல் வந்ததையடுத்து புதிய விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating