தென்கொரியாவில் வேகமாக வந்த ரெயில் தடம் புரண்டது..!!
Read Time:59 Second
தென்கொரியாவில் உள்ள யூல்சான் நிலையம் வழியாகவந்த அந்த ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அதிகமாக இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விபத்து நிகழ்ந்தபோது 27 பயணிகளுடன் வந்த அந்த ரெயில் தண்டவாளத்தில் ஒரு வளைவான பாதையை கடந்தபோது 50 கிலோமீட்டர் வேகத்துக்கு பதிலாக 127 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக தெரிகிறது. இதனால், ரெயிலின் ஏழு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம்புரண்டு கவிழ்ந்தன.
இந்த விபத்தில் ஒரு என்ஜினீயர் பலியானதாகவும், எட்டுபேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Average Rating