4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!
Read Time:1 Minute, 3 Second
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மதுபானசாலைக்கு முன்பாக இன்று காலை 6 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்நத 4 பிள்ளைகளின் தந்தையான 70 வயதுடைய க.தர்மலிங்கம் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
சடலம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating