உல்லாசத்தை நேரில் பார்க்க சொல்லி 8–ம் வகுப்பு மாணவியை மிரட்டிய காப்பக நிர்வாகி–பெண் வார்டன் கைது…!!
உல்லாசத்தை நேரில் பார்க்க சொல்லி மாணவியை மிரட்டிய காப்பக நிர்வாகி–பெண் வார்டன் கைது செய்யப்பட்டனர்.
கோவை கணபதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி (வயது14).(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் கடந்த ஒரு வருடமாக விளாங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கியிருந்து. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் செல்வி கடந்த சில மாதங்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
இதனை அறிந்த பள்ளி முதல்வர் செல்வியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது செல்வி பள்ளி முதல்வரிடம் கூறியதாவது–
தான் தங்கி இருக்கும் காப்பகத்தின் நிறுவனராக கணபதியை சேர்ந்த ஜெகன்(45) என்பவர் உள்ளார். காப்பகத்தின் வார்டனாக விளாங்குறிச்சியை சேர்ந்த சித்ரா (28) என்பவர் உள்ளார்.
காப்பகத்தின் நிறுவனர் ஜெகனுக்கும் வார்டன் சித்ராவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
கடந்த ஒரு வருடமாக அவர்கள் உல்லாசமாக இருக்கும் போது அதை நான் பார்க்கும்படி கொடுமை படுத்துகிறார்கள். இதனால் எனக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போனதாக செல்வி பள்ளி முதல்வரிடம் கூறினார்.
அவர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வார்டனாக இருக்கும் சித்ரா கடந்த 2012 – ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்ததாகவும், கணவர் இறந்து விட்டதால் காப்பக நிர்வாகியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது.மேலும் மாணவி சொன்ன புகாரும் உண்மை என தெரிய வந்தது.
இதனையடுத்து பள்ளி மாணவி செல்வியை கொடுமை படுத்திய காப்பக நிறுவனர் ஜெகன், வார்டன் சித்ரா ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating