உளுந்தூர்பேட்டை அருகே 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி…!!
9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் பலி.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகரை சேர்ந்தவர் வடிவேலு. என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்றிரவு வடிவேலு கோவிலுக்கு உறவினர்களுடன் சென்றார்.
தரிசனம் முடிந்து அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காரில் நெய்வேலிக்கு புறப்பட்டார். கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றது.
சுங்கச்சவாடியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றதால் வடிவேலு காரின் வேகத்தை திடீரென குறைத்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. அப்போது பின் தொடர்ந்து வந்த ஆம்னி பஸ், மினி லாரி மீது மோதி அதே வேகத்தில் வடிவேல் கார் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்ததால் காரில் இருந்த வடிவேலு, வடிவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த 2 கார்கள் மீது மினி லாரி, ஆம்னி பஸ்கள் மோதின. இதில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (45), சென்னை ஆலம்பாக்கத்தை சேர்ந்த வேலு ஆகியோர் பலியானார்கள்.
இந்த தொடர் விபத்தில் கார், ஆம்னி பஸ்களில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர். 9 வாகனங்கள் மோதி தொடர் விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Average Rating