மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த எண்ணெய் அழிப்பு…!!
Read Time:1 Minute, 15 Second
மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த ரூபா 50,000 பெறுமதியான பாம் எண்ணெய்யை (200 கிலோ) அழிக்குமாறு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்க்கு உத்திரவிட்டுள்ளார்.
கேகாலை பகுதியிலிருந்து நல்லதண்ணி பகுதிக்கு கொண்டு வந்த இந்த பாம் எண்ணெய்யில் சுத்தம் இல்லாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போது பொது சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இந்த எண்ணெய் 23.04.2016 அன்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் பி.கே.எல் வசந்தவினால் பொகவந்தலாவ பகுதியில் வைத்து அழிக்கப்பட்டது.
மேலும் குளிரூட்டப்படாத நிலையில் விற்பனைக்காக கொண்டு சென்ற 30870 ரூபா பெறுமதியான 1029 யோகட்களும் இவ்வாறு அழிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
Average Rating