வல்லிபுர ஆழ்வார் மகாசபைத் தலைவர் நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை…!!
Read Time:58 Second
இன்று காலை 10.30 மணியளவில் நிலாவரைக் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் என்பவர் இன்று காலை நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் யாழ் . பல்கலைக் கழக புள்ளிவிபரவியல் துறை விரிவுரையாளரும், சமாதான நீதவானும், வல்லிபுர ஆழ்வார் ஆலய மகாசபைத் தலைவருமாக இருந்து வந்துள்ளார்.
நிலாவரைக் கிணற்றில் சடலத்தை மீட்க மீட்புப் படையினருக்கு பொலிசார் அறிவித்துள்ளனர்.
Average Rating