கனடா நாட்டில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 வயது குழந்தை..!!

Read Time:2 Minute, 14 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70கனடா நாட்டில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 வயது குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 36 வயதான தந்தை ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் கனடா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மாண்ட்ரீயல் நகரில் உள்ள ஒரு ஹொட்டலில் அவர் தங்கியுள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஹொட்டலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவர் அங்குள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டுள்ளார்.

அப்போது, நீச்சல் குளத்தில் மூழ்கி தந்தையும், அந்த 2 வயது குழந்தையும் உயிருக்கு போராடியுள்ளதை கண்டு மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த மருத்துவர்கள் தந்தைக்கும் குழந்தைக்கும் அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தை உயிர் பிழைத்துவிடும் என்ற மருத்துவர்கள் இருந்த நிலையில், கடந்த வெள்ளி அன்று குழந்தையும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.

ஹொட்டல் நீச்சல் குளத்தில் தந்தை குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது திட்டமிட்ட சதி வேலையா என்பது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாக்தாத் நகரில் இரட்டை கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி…!!
Next post குவிந்து கிடக்கும் வாயு முகமூடிகள்! மயான நிலையில் மருத்துவமனைகள்: மறக்கமுடியாத செர்னோபில் துயரம்…!!