ரஷ்யாவில் பயங்கரம்: பொலிஸ் அதிகாரி உள்பட 5 குடும்ப உறுப்பினர்கள் கொடூர கொலை…!!

Read Time:2 Minute, 3 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)ரஷ்யா நாட்டில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடைய 5 குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமாரா மாகாணத்தில் உள்ள Ivashovka என்ற நகரில் Andrey Gosht(49) என்பவர் காவல் துறை உயர் பிரிவில் துணை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வேளையில் பொலிசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து பொலிசார் ஆண்ட்ரீ வீட்டை சோதனை செய்துள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் பொலிஸ் அதிகாரி உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அருகில் 7 வயதான குழந்தை ஒன்று உயிருக்கு போராடி இருந்துள்ளது. குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அது கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் யார் என்ற தகவல்கள் சற்று முன்னர் வெளியானது. இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி, அவரது தந்தை மற்றும் தாய், பொலிஸ் அதிகாரியின் சகோதரர், அவருடைய மனைவி மற்றும் இவர்களுடைய குழந்தை என 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குவிந்து கிடக்கும் வாயு முகமூடிகள்! மயான நிலையில் மருத்துவமனைகள்: மறக்கமுடியாத செர்னோபில் துயரம்…!!
Next post இருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்கள் யார்?: பொலிசார் தீவிர விசாரணை…!!