பொலிஸ் – போராட்டக்காரர்கள் இடையே அடிதடி: 12 பேர் கைது…!!

Read Time:2 Minute, 7 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பொலிசாருக்கும் போராட்டக்கரார்களுக்கும் இடையே அடிதடியில் ஈடுப்பட்ட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்த்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத காரணத்திற்காக கடந்த மார்ச் 31ம் திகதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாரீஸில் உள்ள Nuit Debout இளைஞர்கள் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நேற்று அனுமதி பெறாமல் இந்த அமைப்பை சேர்ந்த 100 பேர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் சென்றபோது, போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

பொலிசாரின் வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

பொலிசார் உடனடியாக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.

எனினும், இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இது குறித்து பொலிசார் பேசுகையில், ‘அனுமதியின்றி போராட்டத்தை நடத்திய காரணத்திற்காக அதில்ஈடுப்பட்ட 12 பேரை கைது செய்து விசாரணை செய்து வருவதாக’ தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்கள் யார்?: பொலிசார் தீவிர விசாரணை…!!
Next post கேளம்பாக்கத்தில் பெண் டாக்டர் மர்ம சாவு…!!