முல்லைத்தீவில் மரத்திலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 15 Second
முல்லைத்தீவு முள்ளியவளையில் பனை மரத்திலிருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பிய நிலையில் மரத்தில் ஏறி தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முள்ளியவளையை சேர்ந்த சுரேஸ்குமார் வராகன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மதுபோதைக்கு இளைஞர்கள் பலரும் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating