பாடசாலை மாணவி துஷ்பியோகம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்…!!
மட்டக்களப்பில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் மூவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் கே.தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின்பேரில் காத்தான்குடி பொலசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஒருவரையும் அவருக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இருவரையும் கைதுசெய்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாடசாலையில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது
Average Rating