ட்ராபிக் சிக்னலில் காத்திருந்த போதும் தேடி வந்த அபாயம்…!!
Read Time:59 Second
வீதிகளை கடக்கும்போது ட்ராபிக் சிக்னல்களை அவதானித்து செல்வது அவசியம் ஆகும். ஆனாலும் சிலர் தமது அவசரத்திற்காக எடுக்கும் முடிவுகளால் விபரீதங்கள் ஏற்படுவதுண்டு.
அவ்வாறே இங்கும் நேர் பாதையில் செல்லவேண்டிய இராட்சத ட்ரக் ஒன்று வீதியைக் கடப்பதற்காக காத்துக்கொண்டிருந்த நபர்களை நோக்கி வேகமாக வந்துள்ளது. இதன்போது ஒரு சிலர் தமது உயிரைக் காப்பாற்ற வாகனங்களை அப்படியே போட்டு விட்டு ஓடித் தப்பியுள்ளனர்.
ஆனாலும் இருவர் ட்ரக் வண்டி வந்த திசையிலேயே ஓடியுள்ளனர். இதன்போது எதிரே இருந்த காருடன் சேர்த்து அவர்களை மோதித்தள்ளியுள்ளது அந்த ட்ரக் வண்டி.
Average Rating