கம்பஹாவில் மினிசூறாவளி ஒருவர் பலி; ஐவர் காயம்..!!
கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி,கடும் மழை மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரண மாக ஒருவர் உயிரிழந்து 5பேர் காமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் வாகனப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந் திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை பெய்த மினி சூறாவளியுடன்கூடிய மழை காரணமாக மாவட்டத் தின் பல பிரதேசங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததாகவும் பல வீடுகள் சேதமாகியுள்ள துடன் வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது.
கடும் காற்றுடன்கூடிய மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்த பிரதேசத்தில் நேற்று மாலை மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது. பாதைகளில் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Average Rating