மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது:16 பேர் வைத்திய சாலையில்..!!

Read Time:1 Minute, 58 Second

162d11ae-1aa0-4450-9134-e5cde1fe72b4பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

குறித்த விபத்தினுள் ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப்பேர் உள்ளடங்கலாக பதினாறுபேர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஊவா பல்கலைக்கழக மாணவன் .ஒருவர் முதுகுப்புறத்தில் பலமாக அடிபட்ட காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஊவா .பல்கலைக்கழக விஞ்ஞன மற்றும் தொழில்நுட்ப கற்கை நெறி முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுமுறைக்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு பதுளை தனியார் பேருந்து ஒன்றில் யாழ் நோக்கி சென்று ​கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் காரணமாக மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் உள்ள இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமிற்கு அருகில் உள்ள திருப்பத்தில் பேரூந்து தடம்புரண்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விசாகப்பட்டினம்: பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து – பல கோடி சேதம்..!!
Next post பள்ளியில் சிகரெட் புகைப்பதைக் தட்டிக் கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து! யாழில் சம்பவம்…!!