பள்ளியில் சிகரெட் புகைப்பதைக் தட்டிக் கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து! யாழில் சம்பவம்…!!

Read Time:1 Minute, 30 Second

imagesயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – தனங்கிளப்பு பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலாக்காகிய பாடசாலை மாணவன் உள்ளிட்ட சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலினுள் இளைஞர் குழு ஒன்று சிகரெட் புகைத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

அதனைக் கண்ணுற்ற குறித்த பாடசாலை மாணவன் அதனைத் தவறு என்று தட்டிக்கேட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த குழுவினர் குறித்த மாணவனையும் அவரது சகோதரனையும் கடுமையாகத் தாக்கியதோடு, கத்தியால் குத்தி இருவருக்கும் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இருவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது:16 பேர் வைத்திய சாலையில்..!!
Next post நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன…!!