கிணற்றில் வீழ்ந்து சிறுமி பலி…!!
Read Time:53 Second
ஊர்காவற்துறை, நாரந்தனை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை குறித்த சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் தற்போது ஊர்காவற்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
7 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுமியின் பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating