முள்ளியான் பகுதியில் வெள்ளைவானில் இருவர் கடத்தல்…!!
Read Time:52 Second
வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியினைச் சேர்ந்த இருவரை வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) என்பவர்களே கடத்திச் செல்லப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவர்கள் இருவரும் கடற்றொழில் செய்து வருபவர்கள் வழமை போன்று கடற்றொழிலுக்காக வீட்டில் இருந்து கடற்கரை நோக்கிப் மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதென்றும் தெரியவந்துள்ளது.
Average Rating